close
Choose your channels

மார்க் சக்கர்பெர்க் எவ்வளவு பவர் ஃபுல் தெரியுமா? வைரலாகும் தகவல்!

Friday, November 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதும் பல்வேறு தரப்புகளில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதிலும் வெளிப்படைத் தன்மையைப் பற்றி சிலர் எழுப்பும் கேள்விகளுக்கு அந்நிறுவனம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில் அந்நிறுவனத்தின் செயல் தலைவர் மார்க் சக்கர்பெர்க்கை (CEO) பதவியில் இருந்து நீக்கிவிட்டால் சிக்கல் தீர்ந்துவிடும் என்று ஃபேஸ்புக்கின் மீதான குற்றச்சாட்டுகளை வெளியுலகத்தில் அம்பலப்படுத்திய பிரான்சஸ் ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவலை அடுத்து யார் இந்த மார்க் சக்கர்பெர்க் என்பது பற்றிய குறிப்புகள் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகின்றன.

ஃபேஸ் புக் நிறுவனத்தின் செயல் தலைவர் மார்க் சக்கர்பெர்க். அதுமட்டுமல்லாமல் அந்நிறுவனத்தை நிறுவியவரும் இவர்தான். மேலும் இந்நிறுவனத்தின் பெரும்பாலான வர்த்தகப் பங்குகளைத் தனக்குச் சொந்தமாக வைத்துள்ளார். ஒருவேளை அனைத்து ஃபோர்ட் உறுப்பினர்களும் எதிர்த்தால்கூட மார்க்கின் பங்குகள் அவரைக் காப்பாற்றிவிடும். அந்த அளவிற்கு அதிகமான பங்குகளை வைத்திருப்பவர்தான் இந்த மார்க் சக்கர்பெர்க்.

எனவே மார்க்சக்கர்பெர்க்கின் செயல் தலைவர் பதவியை பறிக்க முடியாது என்றே கருத்துக் கணிப்புகள் சொல்லப்படுகின்றன. தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்தைப் பொறுத்தவரைக்கும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை ரகசியமாகத் திருடியுள்ளது மற்றும் விவரங்களை டவுன்லோடு செய்ய முடியாத அளவிற்கு வெளிப்படைத் தன்மை இல்லாமல் செயல்படுகிறது, விளம்பர நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது, அவதூறு கருத்துகளுக்கு இடமளித்துள்ளது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டு உள்ளன.

உலகம் முழுக்க பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை சொந்தமாக்கியுள்ள இந்த ஃபேஸ்புக்கின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.