கொலைகார குப்பத்தை பார்வையிட வேலைக்காரன் படக்குழுவினர் சிறப்பு ஏற்பாடு

  • IndiaGlitz, [Wednesday,December 27 2017]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி பெரிய ஸ்டார்களின் படத்திற்கு இணையான ஓப்பனிங் வசூலை கொடுத்துள்ளது. அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்த இந்த படத்தின் ஒரு ஸ்பெஷல் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் அவர்கள் அமைத்த கொலைக்கார குப்பம் செட் தான்

இந்த செட் அமைக்கப்பட்ட விதம் குறித்த வீடியோ ஏற்கனவே இணையதளங்களில் வெளிவந்த நிலையில் தற்போது இந்த கொலைக்கார குப்பம் செட்டை ரசிகர்கள் நேரில் கண்டு ரசிக்க வேலைக்காரன் படக்குழுவினர் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர்

இந்த செட்டை பிரிக்கும் முன்னர் மீடியா, மாணவர்கள், பொதுமக்கள், சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஆகிய அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் விரைவில் ஒரு அறிவிப்பு வெளிவரவுள்ளதாக வேலைக்காரன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த குப்பத்து செட்டில் படக்குழுவினர் கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர் என்பதும் இந்த குப்பத்து செட்டை நேரில் பார்க்க பொதுமக்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

பிறந்த நாள் அன்று 'வேலைக்காரன்' படம் பார்த்த 92 வயது அரசியல்வாதி

பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை, எளிமைக்கு உதாரணமானவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு.

ரசிகர் மன்ற நிர்வாகி விபத்தில் பலி: நேரில் அஞ்சலி செலுத்திய கார்த்தி

நடிகர் கார்த்தியின் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் நேற்று விபத்தில் ஒன்றில் பரிதாபமாக பலியானார். அவரது இல்லத்திற்கு சென்று நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மதுர வீரன்' வீடியோ பாடலை வெளியிட்ட பிரபல வீராங்கனை

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த 'மதுரவீரன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

பெரியபாண்டியை சுட்டது முனிசேகர்தான்: தமிழக காவல்துறை விளக்கம்

சென்னையில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற காவல்துறையின் தனிப்படையில் இருந்த ஆய்வாளர் பெரியபாண்டியனை கொள்ளையர்கள் சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டது.

ஜெயலலிதாவை விட தினகரன் சிறந்த அரசியல்வாதியா? குஷ்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற்றுள்ளது பல அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.