மெர்சல் அப்டேட்: விஜய் முடித்தார், ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கினார்

  • IndiaGlitz, [Friday,September 15 2017]

தளபதி விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஒருசில பேட்ச்வொர்க் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் கடந்த சில நாட்களாக நடந்து வருவது தெரிந்ததே

இந்த நிலையில் தளபதி விஜய் தனது காட்சிகளுக்குரிய டப்பிங் பணியை முடித்துவிட்டதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் தனது ரீரிகார்டிங் பணிகளை தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் திரையிட திட்டமிட்டுள்ளதால் படக்குழுவினர் முழுவீச்சில் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

நீதிமன்றம் ஏன் எம்.எல்.ஏக்களை எச்சரிக்கவில்லை. கமல்ஹாசன் கேள்வி

உலக நாயகன் கமல்ஹாசன் மனதில் தோன்றும் கருத்துக்களை தைரியமாக தெரிவிப்பவர் என்பதும் முதல்வர் உள்பட அனைவரையும் விமர்சித்து வருகிறார் என்பதும் அவரது டுவிட்டரை ஃபாலோ செய்து வரும் அனைவருக்கும் தெரிந்ததே

தனுஷ் படத்தின் டிரைலர் இன்று வெளியீடு

தனுஷ் நடித்த 'விஐபி 2' சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறா

சூர்யா-ஜோதிகாவுக்கு பிரபல இயக்குனர் வாழ்த்து

பிரபல இயக்குனர் சுசீந்திரன் நல்ல படங்கள் வரும்போதெல்லாம் வாழ்த்து தெரிவித்து வருவதை ஒரு வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் இன்று வெளியாகியுள்ள 'மகளிர் மட்டும்' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்ட பிசி ஸ்ரீராம்-தமன்னா

இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய பிசி ஸ்ரீராம் படத்தில் பணிபுரிய வேண்டும் என்பது ஒவ்வொரு நட்சத்திரங்களின் விருப்பமாக உள்ளது என்பது தெரிந்ததே.

விஜய்சேதுபதி படத்தில் 3 முறை ஆஸ்கார் விருது வென்ற கலைஞர்

நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தை அடுத்து பாலாஜி தரணீதரன் இயக்கிய 'ஒருபக்க கதை' சமீபத்தில் சென்சார் சான்றிதழ் பெற்றது என்பதை பார்த்தோம்.