close
Choose your channels

மெர்சல் அப்டேட்: விஜய் முடித்தார், ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கினார்

Friday, September 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஒருசில பேட்ச்வொர்க் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் கடந்த சில நாட்களாக நடந்து வருவது தெரிந்ததே

இந்த நிலையில் தளபதி விஜய் தனது காட்சிகளுக்குரிய டப்பிங் பணியை முடித்துவிட்டதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் தனது ரீரிகார்டிங் பணிகளை தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் திரையிட திட்டமிட்டுள்ளதால் படக்குழுவினர் முழுவீச்சில் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.