close
Choose your channels

எல்.ஐ.சி பங்குகள் விற்பனை, தனிநபர் வருமான வரிச்சலுகை: பட்ஜெட்டில் மேலும் சில முக்கிய அம்சங்கள்

Saturday, February 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று காலை முதல் 2020ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையை பாராளுமன்றத்தில் படித்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனிநபர் வருமான வரிச்சலுகை குறித்த அறிவிப்பை அறிவித்துள்ளார்.

இதன்படி ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என்றும் ரூ.5 லட்சம் - 7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20% இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.7.5 லட்சம் - 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20% இருந்து 15% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.10 லட்சம் - 12.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 30% இருந்து 20% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.12.5 லட்சம் - 15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 30% இருந்து 25% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யில் உள்ள மத்திய அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கையான "தொல்லியல்துறை அருங்காட்சியகம்" தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாரத் நெட் மூலம் 1 லட்சம் கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் இணையதள வசதி செய்து தரப்படும் என்றும், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் தகவல் சேகரிப்பு பூங்கா அமைக்கப்படும் என்றும் தகவல் சேகரிப்பு மையங்களை தனியார் அமைக்க வகை செய்யும் கொள்கை உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.