கமல்ஹாசனின் 'அல்வா' விமர்சனத்திற்கு செல்லூர் ராஜூ பதிலடி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஒரு சில அம்சங்கள் ஏழை எளிய மக்களுக்கு சாதகமாக இருந்தாலும் பெரும்பாலும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமான பட்ஜெட் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். நடுத்தர வர்க்கத்தை பொறுத்த வரை வருமான வரி சலுகை இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டிருப்பது ஒரு சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதிக் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் அவர்கள் ’அதிகாரிகளுக்கு அல்வா கொடுப்பதோடு ஆரம்பித்த பட்ஜெட், மக்களுக்கு அல்வா கொடுத்ததோடு முடிந்துள்ளது’ என தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டார்.

கமல்ஹாசனின் இந்த விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டை முழுவதும் படித்து பார்த்து கமலஹாசன் கூற வேண்டும் என்றும் இமேஜ்க்காக குரல் கொடுத்துவிட்டு ’இந்தியன் 2’ படத்தில் நடிக்க கமல் சென்று விடுவார்’ என்றும் கூறினார். மேலும் இந்த பட்ஜெட் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

More News

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தாதது ஏன்? கருணாஸ் விளக்கம்

கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை ஐகோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்த நிலையில் தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து விஷால் தரப்பு

திருமூர்த்தியும் ஷங்கர் மகாதேவன் மகனும் எனக்கு ஒன்றுதான்: டி.இமான்

ஜீவா நடித்த 'சிறு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் டி இமான் கலந்துகொண்டு பல சுவாரசிய தகவல்களை அளித்தார்.

குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி!

திண்டிவனம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் குழந்தை பிறந்த அன்றே திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சூர்யாவுக்கு  முதல்முறையாக ஜோடியாகும் கார்த்தி பட நாயகி!

சூர்யா நடித்து முடித்துள்ள 'சூரரைப்போற்று' என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சூர்யா அடுத்ததாக இயக்குனர் ஹரி

2020 -2021 மத்திய பட்ஜெட் – ஒரு அலசல்

இந்தியப் பொருளாதாரத்துக்கான அடித்தளம் மிகவும் வலுவாகவே உள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்தப் பட்டுள்ளது. துடிப்பான பொருளாதாரத்தை உருவாக்குவதே எங்களின் இலக்கு