close
Choose your channels

முன்னாள் காதலனுடன், கள்ளக்காதல்....! கணவரை கொல்ல தோழன் முயற்சி...!

Tuesday, July 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன்னுடைய முன்னாள் காதலனுடன், கள்ளக்காதல் வைத்துக்கொண்ட சிறுமி, கணவரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கத்தாலம்பட்டி என்ற கிராமத்தை சார்ந்த 30 வயது நிரம்பியவர் தான் கருப்பசாமி. சென்னை எண்ணூர் பகுதியில் வசித்து வரும் இவர், மணலி ஆண்டார்குப்பத்தில் இருக்கும் உணவகத்தில் வேலைபார்த்து வருகிறார். அதே உணவகத்தில் தனது மகளுடன்  பணிபுரிந்து வருபவர் தான் ஜோதி என்ற பெண். இருவரும்  ஒரே இடத்தில் வேலை செய்யும் பழக்கத்தால், தனது மகளை கருப்பசாமிக்கு சென்ற வருடம் தூத்துக்குடியில் வைத்து திருமணம் முடித்து வைத்தார்  அந்தப்பெண்.

கல்யாணமான ஒரு மாத காலத்திலேயே, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட அந்த சிறுமி, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். மனைவியை சமாதானப்படுத்த வந்த கருப்பசாமி அவர்களிடம் அமர்ந்து பேசியுள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த வசந்தகுமார் என்ற இளைஞன் அவர் தலையில் கத்தியால் வெட்டியுள்ளான். பலத்த காயமடைந்ததை கருப்பசாமி, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து எண்ணூர் காவல் நிலையத்தில் கருப்பசாமி புகார் அளித்தார்.  இதையடுத்து வசந்தகுமாரை விசாரணைக்காக அழைத்து வந்த காவல்துறையினர், விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தண்டையார்பேட்டையில் இருக்கும் பள்ளியில் பயிலும் போதே 16 வயதுடைய சிறுமிக்கும், வசந்த குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  மூன்று மாதங்களாக காதலித்து வந்த இவர்களுக்குள் , சிறுமியின் திருமணத்திற்குப்பின்பும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வசந்தகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின் புழல் சிறையில் அடைத்தனர். சிறுமியின் வயது 16 என்பதால், அவரை காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.