விஷ்ணு விஷாலின் அடுத்த பட டைட்டில் வீடியோ ரிலீஸ்

  • IndiaGlitz, [Saturday,April 11 2020]

கோலிவுட் திரையுலகின் இளம் ஹீரோக்களில் ஒருவராகிய விஷ்ணுவிஷால், தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்குவதாக இருந்தார். ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பை தொடங்குவதாக இருந்த அதே நாளில் இந்த படத்தின் டைட்டில் வீடியோவை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு ரசிகர்களின் அனுமதி வேண்டும் என்று கேட்டிருந்தார். ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்ததை அடுத்து சற்றுமுன் விஷ்ணுவிஷாலின் அடுத்த படம் குறித்த டைட்டில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘மோகந்தாஸ்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டைட்டில் வீடியோவே மிரட்டும் வகையில் இருக்கின்றது என்பதும் ’ராட்சசன்’ போல் இதுவொரு க்ரைம் ஸ்டோரி என்பதும் தெரிய வருகிறது

முரளி கார்த்திக் இயக்கும் இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கவுள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவில் கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

ஊரடங்கு உத்தரவு குறித்து பிரதமர் எடுத்த முடிவு என்ன? அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் உள்பட அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை செய்த பிரதமர் மோடி, ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது

கொரோனா பரிசோதனையில் தொடரும் குழப்பங்கள்!!! இந்தியாவின் நிலைமை என்ன!!!

கொரோனா நோய்த்தொற்று மற்ற பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் போன்று இருப்பதில்லை. இதற்காகச் செய்யப்படும் பரிசோதனை முதற்கொண்டு இந்த வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு வரை அனைத்தும் வித்தியாசப்படுகின்றன

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவரை சந்திக்க சென்ற நபர் கைது

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவரை சந்திக்கச் சென்ற நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்ட 51 பேர்களுக்கு மீண்டும் கொரோனா: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஒரு பக்கம் பாதிப்பு அடைந்து வந்தாலும் இன்னொரு பக்கம் கொரோனாவில் இருந்து மீண்டு குணமாகி

8 ஆயிரம் கோடி வீடியோவுக்கு மன்னிப்பு கேட்ட மதுவந்தியின் வேறு சில கேள்விகள்!

சமீபத்தில் ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி வெளியிட்ட வீடியோ ஒன்றில்  8,000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடியை அவர்களது வங்கிக் கணக்கில் 'உஜ்வாலா' திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி