close
Choose your channels

'மாநாடு' வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த மோகன்லால்: காரணம் இதுதான்!

Thursday, December 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தின் வெற்றி தமிழ் திரை உலகிற்கே ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வெற்றியை தமிழக திரையுலகமே கொண்டாடி வரும் நிலையில் அண்டை மாநிலத்தின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இந்த படத்தின் வெற்றிக்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

மோகன்லாலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் ’மாநாடு’ படத்தின் ஹீரோயின் என்பதால் இந்த படத்தின் வெற்றி அவரை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இன்று வெளியாகும் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான ’மரைக்கர்’ என்ற திரைப்படத்திலும் கல்யாணி பிரியதர்ஷன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லாலின் ’மரைக்கர்’ திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானது என்பதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட ஐந்து மொழிகளில் இன்று ரிலீஸ் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.