ராகவன் விவகாரம்...பாஜகவின் பி டீம் என்பதை சீமான் நிரூபித்துவிட்டார்..! எம்.பி ஜோதிமணி அறிக்கை..!

சீமான் மீது உள்ள குற்றத்தை மறைக்கவே, அவர் ராகவனுக்கு ஆதரவாக பேசுகிறார் என்று கரூர் எம்.பி. ஜோதிமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்ற காலங்களில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், தன்னுடைய தவறை மறைக்கவே அவர், ராகவன் செய்த பாலியல் குற்றத்தை ஆதரிக்கிறார். இதிலிருந்தே அவர் பாஜக-வின் பீ-டீம் என தெரிகிறது, சீமானின் இப்படி நடந்து கொள்வது வெட்கக் கேடாகும் என எம்.பி. ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.

சீமான் பதில்.....


சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில், நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களிடம், கே.டி.ராகவன் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்த பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து சீமான் பேசியிருப்பதாவது,
இந்த குற்றச்சாட்டுகள் என்பது சமூகம் சார்ந்த குப்பை. ராகவனின் அனுமதி பெறாமல், அவருடைய தனிப்பட்ட வீடியோவை பதிவு செய்திருப்பது, அதை வெளியிடுவது சமூக அவலம். முதலில் இந்த காணொளியை வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும். இந்த உலகத்தில் மற்றவர்கள் செய்யாததையா அவர் செய்துவிட்டார்...? என்று பேசினார்.

சீமானின் பேச்சுக்கு, எம்.பி.ஜோதிமணி அறிக்கை.....!


சீமான் இது பற்றி பேசியதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது,
பெண்களுக்கு எதிரான பாலியல்‌ குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும்‌ சமூகம்‌ சரியாகத்தான்‌ இருக்கிறது. பாஜக ராகவனின்‌ பாலியல்‌ குற்றத்தை, சுரண்டலை சிறிதும்‌ வெட்கம்‌ இல்லாமல்‌ அப்பட்டமாக ஆதரிக்கும்,‌ சீமானின்‌ செயல்பாடுதான்‌ வெட்கக்கேடானது. சீமான்‌ ஒரு அரசியல்‌ கட்சியின்‌ தலைவர்‌ இவர்‌ இப்படிப்‌ பொறுப்பில்லாமல்‌, பெண்களுக்கு எதிரான பாலியல்‌ குற்றங்களை, சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நாம்‌ தமிழர்‌ கட்சியில்‌ இருக்கும்‌ கள்ளமில்லாத இளைஞர்களின்‌ மனதில்‌, பெண்களுக்கு எதிரான பாலியல்‌ குற்றங்கள்‌ சரியென்ற மனநிலையை சீமான்‌ உருவாக்குகிறார்‌. இது ஒட்டுமொத்த பெண்களுக்கும்‌, தமிழ்‌ சமூகத்திற்கும்‌ ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.

பாஜகவிடமிருந்து மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க, ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும்‌ சீமான்‌ போன்றவர்களிடமும்‌ பெண்களும்‌, தமிழ்ச் சமூகமும்‌ விழிப்புடன்‌ இருக்கவேண்டும்‌.

இவர்கள்‌ எல்லாம்‌ பெண்களின்‌ பாதுகாப்பு, மரியாதை, கண்ணியம்‌ பற்றி துளிகூட கவலைப்படாதவர்கள்‌, பெண்களை பாலியல் ரீதியான வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை ஆதரிப்பவர்கள்‌. காலம்‌ காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல்‌ வன்முறைகள்‌, குற்றங்கள்‌, ஒடுக்குமுறைகள்‌, சுரண்டல்கள்‌ நடந்துகொண்டுதான்‌ இருக்கின்றன. அதற்காக அவையெல்லாம்‌. சரியென்று ஆகிவிடுமா? பாலியல்‌ குற்றவாளிகள்‌ எல்லாம்‌ நிரபராதிகள்‌ ஆகிவிடுவார்களா?

எப்படி காலங்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல்‌ வன்முறைகள்‌ நடக்கினற்றனவோ அதேபோல அதற்கு எதிரான போராட்டங்களும்‌ நடந்துகொண்டுதானிருக்கிறன என்பதை சீமான்‌ நினைவில்‌ கொள்ளவேண்டும்‌. அந்த போராட்டங்களின்‌ பயனாகவே இன்று பெண்கள்‌ அரசியல்‌ உள்ளிட்ட பல்வேறு துறைகளில்‌ தங்களது வெற்றிகரமான பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள்‌. பல்வேறு உளவியல்‌, சமூக, பொருளாதாரத்‌ தடைகளைத்தாண்டி பொதுவாழ்விற்கு வரும்‌ பெண்கள்‌ கண்ணியத்துடனும்‌, மரியாதையுடனும்‌, பாதுகாப்புடனும்‌ நடத்தப்படவேண்டும்.‌ அப்படியில்லாமல்‌ பெண்களிடம்‌ முறைகேடாக நடந்துகொள்பவர்கள்‌ கண்டிக்கப்படவேண்டும்‌. தண்டிக்கப்படவேண்டும்‌.

இதுதான்‌ ஒரு நாகரிகமான சமூகத்தின்‌ கடமை. அந்த கடமையைத்‌ தான்‌ தமிழ்சமூகம்‌ சரிவர செய்துவருகிறது. பெண்களிடம்‌ முறைகேடாக நடந்துகொள்ளும்‌ அயோக்கியர்களையும்‌, அவர்களை அப்பட்டமாக ஆதரிப்பவர்களையும்‌ தமிழ்‌ சமூகம்‌ ஒருபோதும்‌ ஏற்றுக்கொள்ளாது. இதுதான்‌ சீமான்‌ போன்றவர்களுக்கு உறுத்துகிறது.

சீமான்‌ மீதும்‌ கடந்த காலத்தில்‌ இதுபோன்ற பாலியல்‌ குற்றச்சாட்டுகள்‌ எழுந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்‌ காவல்‌ நிலையத்தில்‌ புகார்‌ அளித்துள்ளார்‌. தனது குற்றத்தை மறைக்கவே சீமான்‌ ராகவனின்‌ பாலியல்‌ குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம்‌ எழுகிறது. மேலும்‌ சீமான்‌ பாஜகவின்‌ B டீம் என்பதை மீண்டும்‌, ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார்‌.

எப்படியிருந்தாலும்‌ சீமானின்‌ இந்த செயல்‌ வெட்கக்கேடானது. சீமான்‌, கேடி. ராகவன்‌ போன்றவர்களின்‌ வளர்ச்சி தமிழ்நாட்டு பெண்களுக்கு பேராபத்தை விளைவிக்கும்‌. தமிழகம்‌ குறிப்பாக தமிழகத்தின்‌ எதிர்காலமான இளைஞர்களும்‌,மாணவர்களும்‌ இப்போதாவது சீமானின்‌ பொய்‌ முகத்தைப்‌ புரிந்து கொண்டு அவரைப்‌ புறக்கணிக்க வேண்டும்‌. அதுவே நாம்‌ தமிழ்ச்‌ சமூகத்திற்கு செய்யும்‌ பெருந்தொண்டு'' என்று பதிவிட்டுள்ளார்.

More News

புதுசா யாரு கதை சொல்றா, பழைய கதையின் உல்டாதான்: 'அனபெல் சேதுபதி' டிரைலர்

விஜய்சேதுபதி, டாப்ஸி நடித்த 'அனபெல் சேதுபதி' என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகும்

துப்பாக்கி முனையில் செய்தி வாசிக்கும் அவலம்… இன்னும் என்னென்ன நடக்குமோ?

ஆப்கானிஸ்தான் மக்கள் தாலிபான்களைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்று துப்பாக்கி முனைகளுக்கு நடுவே செய்தியாளர் ஒருவர் செய்தி வாசிக்கிறார்.

இந்திய வீரரின் பதக்கம் திடீர் பறிப்பு: என்ன காரணம்?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத்குமார் வெண்கல பதக்கம் வென்ற நிலையில்

'உந்தன் கண்களில் என்னடியோ? எம்ஜிஆர் ஜெயலலிதாவாகவே மாறிய 'தலைவி' பாடல்!

'உந்தன் கண்களில் என்னடியோ? எம்ஜிஆர் ஜெயலலிதாவாகவே மாறிய 'தலைவி' பாடல்!

15 வயது சிறுமி முதல் 21 பெண்கள்: 61 வயது நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

61 வயது நடிகர் ஒருவர் 15 வயது சிறுமி முதல் 51 வயது பெண் வரை 21 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது