துப்பறிவாளன் உரிமை எனக்குத்தான்: மிஷ்கின் நிபந்தனைகளால் விஷால் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Monday,March 02 2020]

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த ’துப்பறிவாளன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து விஷாலே இயக்கப் போவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் துப்பரிவாளன் 2’ படத்தை தொடர்ந்து இயக்க வேண்டும் என்றால் தன்னுடைய 15 நிபந்தனைகளுக்கு விஷால் கட்டுப்பட வேண்டும் என்று விஷாலுக்கு மிஷ்கின் ஒரு கடிதம் எழுதியதாக கோலிவுட்டில் பரபரப்பான தகவல் ஒன்று பரவி வருகிறது. அவற்றில் ஐந்து கண்டிஷன்கள் இதோ:

1. தான் இயக்கிய சைக்கோ திரைப்படம் ஹிட்டானதால் தனக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் முன்னதாக மூன்று கோடி மட்டுமே சம்பளம் பேசப்பட்டது.

2. படப்பிடிப்பு முடியும் வரை நான் என்னுடைய வசதிக்கேற்ற ஸ்டார் ஹோட்டலில் மட்டுமே தங்குவேன். இதுகுறித்து விஷாலும் அவருடைய குழுவினரும் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது.

3. இந்த படம் முடியும் வரை தன்னுடைய அலுவலகத்தின் மொத்த செலவையும் விஷாலே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4. எந்த விதமான தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் விஷால் தன்னை தொடர்பு கொள்ளக்கூடாது. நான் மட்டுமே விஷாலுக்கு ஈமெயிலில் அவ்வப்போது தகவல்கள் அனுப்புவேன்.

5. துப்பறிவாளன் படத்தின் அடுத்த பாகங்களை தயாரிக்கும் உரிமை எனக்கு மட்டுமே. டைட்டில் உரிமையும் எனக்கு மட்டும். விஷால் அதற்கு சொந்தம் கொண்டாடக்கூடாது.

மேற்கண்ட நிபந்தனைகளை பார்த்த விஷால் அதிர்ச்சி அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
 

More News

'தளபதி 65' பட நாயகி விஷயத்தில் திடீர் திருப்பம்

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65வது திரைப்படமான 'தளபதி 65' திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும்

நயன்தாராவை கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஆர்ஜே பாலாஜி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான 'மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்

தீவிர ரசிகரை கட்டியணைத்து பாராட்டிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வாக இருக்கும்போது அவ்வபோது தனது ரசிகர்களை சந்தித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜோதிகாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

திருமணத்திற்குப் பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு '36 வயதினிலே' என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா,

பன்றிக்காய்ச்சல் ஒரு நோயே இல்லை.. கொரோனோவுக்கு 'யோகா' இருக்கிறது.. கலக்கும் யோகி ஆதித்யத்நாத்..!

எதனால் ஏற்படுகிறது என்பதன் அடிப்படையில் அதை பன்றிக்காய்ச்சல் அல்லது பறவைக் காய்ச்சல் என்று அழைக்கிறோம்.எனவே, யாரும் பன்றிக்காய்ச்சலை நினைத்து பீதியடைய வேண்டாம்.