close
Choose your channels

துப்பறிவாளன் உரிமை எனக்குத்தான்: மிஷ்கின் நிபந்தனைகளால் விஷால் அதிர்ச்சி

Monday, March 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த ’துப்பறிவாளன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து விஷாலே இயக்கப் போவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் துப்பரிவாளன் 2’ படத்தை தொடர்ந்து இயக்க வேண்டும் என்றால் தன்னுடைய 15 நிபந்தனைகளுக்கு விஷால் கட்டுப்பட வேண்டும் என்று விஷாலுக்கு மிஷ்கின் ஒரு கடிதம் எழுதியதாக கோலிவுட்டில் பரபரப்பான தகவல் ஒன்று பரவி வருகிறது. அவற்றில் ஐந்து கண்டிஷன்கள் இதோ:

1. தான் இயக்கிய சைக்கோ திரைப்படம் ஹிட்டானதால் தனக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் முன்னதாக மூன்று கோடி மட்டுமே சம்பளம் பேசப்பட்டது.

2. படப்பிடிப்பு முடியும் வரை நான் என்னுடைய வசதிக்கேற்ற ஸ்டார் ஹோட்டலில் மட்டுமே தங்குவேன். இதுகுறித்து விஷாலும் அவருடைய குழுவினரும் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது.

3. இந்த படம் முடியும் வரை தன்னுடைய அலுவலகத்தின் மொத்த செலவையும் விஷாலே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4. எந்த விதமான தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் விஷால் தன்னை தொடர்பு கொள்ளக்கூடாது. நான் மட்டுமே விஷாலுக்கு ஈமெயிலில் அவ்வப்போது தகவல்கள் அனுப்புவேன்.

5. துப்பறிவாளன் படத்தின் அடுத்த பாகங்களை தயாரிக்கும் உரிமை எனக்கு மட்டுமே. டைட்டில் உரிமையும் எனக்கு மட்டும். விஷால் அதற்கு சொந்தம் கொண்டாடக்கூடாது.

மேற்கண்ட நிபந்தனைகளை பார்த்த விஷால் அதிர்ச்சி அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos