கொரோனா விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்ட நதியா!

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து மீண்டும் மத்திய மாநில அரசுகள் சில கெடுபிடிகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக பொதுமக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றன.

மேலும் கடைகளில், மால்களில், திரையரங்குகளில் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வுகளை தங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் திரையுலகில் 80களின் கனவு கன்னியாக இருந்த நடிகை நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். நதியா மாஸ்க் அணிந்து காரில் உட்கார்ந்து உள்ள புகைப்படத்தை பதிவு செய்து, கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாகி வருகிறது என்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், போடாவிட்டாலும் மாஸ்க் அணிவதை மறக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

வேட்புமனுக்களை வாபஸ் வாங்கிய பாமக..! புதுச்சேரியில் பரபரப்பு...!

புதுச்சேரியில் 10- தொகுதிகளில்  போட்டியிட இருந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கியுள்ளது. 

தீப்பெட்டி கணேசன் குடும்பத்திற்கு உதவி: பிரபல நடிகர், இயக்குனர் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான தீப்பெட்டி கணேசன் உடல்நல கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் திரைப்படங்கள்: விஜய்சேதுபதிக்கும் விருது

67 வது தேசிய விருது சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு பல தேசிய விருதுகளை தமிழ் திரைப்படங்கள் அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

கொரோனாவால் தள்ளிப்போகிறதா 'சுல்தான்' ரிலீஸ்: எஸ்.ஆர்.பிரபு விளக்கம்!

கார்த்தி நடித்த 'சுல்தான்' திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இரண்டு தேசிய விருதுகளை பெற்றது 'அசுரன்': படக்குழுவினர் மகிழ்ச்சி

67வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல் வந்த நிலையில் சற்று முன் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது