close
Choose your channels

கொரோனா விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்ட நதியா!

Monday, March 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து மீண்டும் மத்திய மாநில அரசுகள் சில கெடுபிடிகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக பொதுமக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றன.

மேலும் கடைகளில், மால்களில், திரையரங்குகளில் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வுகளை தங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் திரையுலகில் 80களின் கனவு கன்னியாக இருந்த நடிகை நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். நதியா மாஸ்க் அணிந்து காரில் உட்கார்ந்து உள்ள புகைப்படத்தை பதிவு செய்து, கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாகி வருகிறது என்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், போடாவிட்டாலும் மாஸ்க் அணிவதை மறக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos