நதியாவை வில்லனுக்கு ஜோடியாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்

  • IndiaGlitz, [Monday,July 18 2016]

மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'வாஸ்கோடகாமா' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாகவும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கவும் பிரபல நடிகை நதியா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபலமாக இருந்த நதியா மீண்டும் ஒரு இடைவெளிக்கு பின்னர் ஜெயம் ரவியின் 'எம்.குமரன் s/o மகாலட்சுமி' என்ற படத்தில் ரீஎண்ட்ரி ஆனார்.
தற்போது முதல்முறையாக வில்லன் கேரக்டருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நதியாவுக்கு நிச்சயம் இந்த படத்தில் அவரது நடிப்புக்கு தீனி இருக்கும் வகையில் அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூப்பர்ஸ்டாரின் அப்பா வேடத்தில் ரீ-எண்ட்ரி ஆகும் சரத்குமார்

கடந்த ஆண்டு சரத்குமார் இரு வேடங்களில் நடித்த 'சண்டமாருதம்' ஓரளவுக்கு சுமாரான வரவேற்பை பெற்றாலும் அதன் பின்னர் அவர்...

ஆயுதபூஜை ரேஸில் இணைந்த விஜய்சேதுபதி படம்

2016ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அன்று ஆயுதபூஜை விடுமுறை நாளில் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய 'ரெமோ'...

சமுத்திரக்கனியின் 'அப்பா' ரீமேக்கில் சூப்பர் ஸ்டார்?

கடந்த 1ஆம் தேதி வெளியான சமுத்திரக்கனியின் 'அப்பா' திரைப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

மீண்டும் 'கத்தி'யை தயாரிக்கின்றது லைகா நிறுவனம்

கோலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமாக லைகா நிறுவனம் முதன்முதலாக இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தை தயாரித்தது.

'கபாலி' வழக்கில் திரையுலகினர்களுக்கு நீதிபதி கூறிய அறிவுரை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு...