close
Choose your channels

நதியாவை வில்லனுக்கு ஜோடியாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்

Monday, July 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'வாஸ்கோடகாமா' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாகவும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கவும் பிரபல நடிகை நதியா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபலமாக இருந்த நதியா மீண்டும் ஒரு இடைவெளிக்கு பின்னர் ஜெயம் ரவியின் 'எம்.குமரன் s/o மகாலட்சுமி' என்ற படத்தில் ரீஎண்ட்ரி ஆனார்.
தற்போது முதல்முறையாக வில்லன் கேரக்டருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நதியாவுக்கு நிச்சயம் இந்த படத்தில் அவரது நடிப்புக்கு தீனி இருக்கும் வகையில் அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.