close
Choose your channels

'கபாலி' வழக்கில் திரையுலகினர்களுக்கு நீதிபதி கூறிய அறிவுரை

Saturday, July 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தாக்கல் செய்த மனுவை நேற்று நீதிபதி கிருபாரன் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட இணையதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், இணையதளங்கள் இந்த படத்தை பதிவேற்ற தடை செய்தும் உத்தரவிட்டார்.
ஆனால் அதே நேரத்தில் நீதிபதி, திரையுலகினர்களுக்கும் சில அறிவுரைகளை கூறியுள்ளார். திரைப்படங்கள் சமூகத்தை பெரும் அளவில் தாக்கம் ஏற்படுத்தும் துறை என்பதால் முன்னணி கதாநாயகர்கள் இதுகுறித்து சிந்தித்து பார்க்கவேண்டும் என்றும் நடிகர்கள், சினிமாவில் மதுகுடிப்பது, சிகரெட்டு பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முன்பு எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் போன்ற நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கு நல்லொழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும் விதமாக நடித்து, சமுதாயத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை உருவாக்கியதாக குறிப்பிட்ட நீதிபதி, தற்போதுள்ள சூழ்நிலையில், சமுதாயத்தில் நடக்கும் பல குற்றங்களுக்கு, சினிமாதான் காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று வருத்தத்துடன் தனது கருத்தை பதிவு செய்தார்.
முன்னணி கதாநாயகர்கள் தங்களது திரைப்படத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் தங்களுடைய திரைப்படம் தவறான தகவல்களை சமுதாயத்துக்கு சொல்லும் விதமாக இருக்கக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கவேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.