close
Choose your channels

நாகர்கோவில் காசி கூறிய 12 பெண்கள் யார் யார்? பரபரப்பு தகவல்

Wednesday, May 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாகர்கோவில் காசி தன்னிடம் ஏமாந்த 12 பெண்களின் பெயரை கூறியுள்ளதாகவும் அந்தப் பெண்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

பள்ளி, கல்லூரி பெண்கள் முதல் குடும்ப பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களை தனது வலையில் விழ வைத்து அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கியதாக நாகர்கோவில் காசி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலில் சென்னை பெண் டாக்டர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசி, அதன் பின் தற்போது 17 வயது சிறுமி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது தன்னிடம் ஏமாந்த 12 இளம் பெண்களின் பெயரை கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த 12 பெண்கள் யார்? அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் செய்து வருகின்றனர்.

மேலும் நாகர்கோவில் காசி போலீஸ் விசாரணையில் இருக்கும்போது அவரிடம் ஏமாந்த சில பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வருவதால் அவற்றை வெளியிடும் நபர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. நாகர்கோவில் காசிக்கு இரண்டு நண்பர்கள் தான் நெருக்கமாக இருந்ததாகவும் அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் இன்னொரு நண்பர் தான் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருக்க வேண்டும் என்றும் அந்த நபர் வெளிநாட்டில் இருப்பதாகவும் போலீசார் முதல்கட்ட விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.