ஒரு முகம் முடிந்தது. அடுத்த முகம் விரைவில்...

  • IndiaGlitz, [Wednesday,April 13 2016]

சீயான் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடிப்பில் அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'இருமுகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியிட ஏற்ற நேரம் வந்துவிட்டதாக ஆனந்த் சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.


ஆனந்த் சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் 'ஒரு முகன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த முகத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகிறது. எனவே இதுவே டீசர் வெளியிட சரியான தருணம்' என்று அவர் கூறியுள்ளார்.

'இருமுகன்' படத்தில் விக்ரம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் ஒரு கேரக்டரின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அடுத்த கேரக்டரின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதை இயக்குனர் மறைமுகமாக கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்த படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரவுள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார்.

More News

அரவிந்தசாமியின் முனிவர் முடிவு ஏன்?

ரோஜா, பம்பாய் போன்ற பல படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்ற நடிகர் அரவிந்தசாமி கடந்த ஆண்டு வெளியான 'தனி ஒருவன்'...

உதயநிதி ஸ்டாலினின் 'மனிதன்' சென்சார் தகவல்கள்

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன 'ஜாலி எல்.எல்.பி' படத்தின் ரீமேக் படமான 'மனிதன்' படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது...

என் மனைவியை 3ஆம் வகுப்பிலிருந்தே எனக்குத் தெரியும்: கவுதம் மேனன்

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷான படங்களை கொடுத்த முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். இவரது படங்களில் எந்த அளவுக்கு ஆக்சன் இருக்கின்றதோ...

நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். எமிஜாக்சன் பூரிப்பு

விஜய் நடித்த 'தெறி' படத்தில் நடித்து முடித்துவிட்ட எமிஜாக்சன் நாளை இந்த படம் கொடுக்கப்போகும் ரிசல்ட்டை அறிய ஆவலுடன் உள்ளார்...

அந்த கதையும் என்னுடையதுதான். பாலாவுக்கு ரத்னகுமார் பதில்

பாரதிராஜாவின் கனவுப்படம் என்று சொல்லப்படும் 'குற்றப்பரம்பரை' படத்தை பாலா இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததால் பாலா மற்றும்...