close
Choose your channels

ஒரு முகம் முடிந்தது. அடுத்த முகம் விரைவில்...

Wednesday, April 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடிப்பில் அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'இருமுகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியிட ஏற்ற நேரம் வந்துவிட்டதாக ஆனந்த் சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.


ஆனந்த் சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் 'ஒரு முகன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த முகத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகிறது. எனவே இதுவே டீசர் வெளியிட சரியான தருணம்' என்று அவர் கூறியுள்ளார்.

'இருமுகன்' படத்தில் விக்ரம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் ஒரு கேரக்டரின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அடுத்த கேரக்டரின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதை இயக்குனர் மறைமுகமாக கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்த படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரவுள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.