close
Choose your channels

என் மனைவியை 3ஆம் வகுப்பிலிருந்தே எனக்குத் தெரியும்: கவுதம் மேனன்

Wednesday, April 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷான படங்களை கொடுத்த முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். இவரது படங்களில் எந்த அளவுக்கு ஆக்சன் இருக்கின்றதோ அதே அளவுக்கு நாகரீகமான ரொமான்ஸ் காட்சிகள் இருக்கும். இதுவரை வெளிவந்த ரொமான்ஸ் படங்கள் குறித்து ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் கண்டிப்பாக கவுதம் மேனனின் 'விண்ணை தாண்டி வருவாயோ' படம் இருக்கும்.


இந்த அளவுக்கு கண்ணுக்கு உறுத்தாத ரொமான்ஸ் காட்சிகள் எடுக்கும் இவர் கண்டிப்பாக தனது வாழ்க்கையிலும் ரொமான்ஸை சந்தித்திருப்பார்தானே...சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது காதல் குறித்து மனம் திறந்தார்.

தனது மனைவி ப்ரித்தியை தனக்கு 3ஆம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே தெரியும் என்றும், அவர் தன்னுடைய பள்ளி தலைமை ஆசிரியரின் மகள் மட்டுமின்றி தனது சகோதரியின் தோழி என்றும் கூறினார். மேலும் சிறுவயதில் நண்பர்களாகத்தான் பழகியதாகவும் போகப்போக நட்பு காதலாக மாறி திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தனது ரொமான்ஸ் குறித்து குறிப்பிட்டார்.

மேலும் தனக்கு திருமணம் ஆகியபோது முதல் படம் கூட வெளிவரவில்லை என்றும், இருப்பினும் அவர் தன்னுடன் பக்கத்துணையாக இருந்தார் என்றும் மனம் திறந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.