close
Choose your channels

நேர்த்திக்கடன் மொட்டையுடன் நடராஜன்: வைரல் புகைப்படங்கள்

Sunday, January 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் நெட் பவுலர் ஆகத்தான் சென்றார். ஆனால் அவருக்கு இந்திய அணியில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட நடராஜன் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தினார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய நடராஜனுக்கு அவரது சொந்த ஊரில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்தால் பழனி முருகன் கோவிலில் மொட்டை போடுவதாக நேர்த்திக்கடன் நேர்ந்து இருந்த நடராஜன் நேற்று மொட்டை அடித்து தனது நேர்த்தி கடனை பழனி முருகன் கோவிலில் செலுத்தினார்

நேற்று அவர் மொட்டை அடித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில் சற்று முன்னர் அவர் தனது சமூக வலைத்தளத்தில் மொட்டை தலையுடன் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.