ஊருக்கு உபதேசம் செய்து, 9 லட்சம் மின்கட்டணம் செலுத்தாத அமைச்சர்… நெட்டிசன்கள் கேலி!

  • IndiaGlitz, [Saturday,July 03 2021]

பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங்குக்கும் அம்மாநில முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு இடையே கடும் அரசியல் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்சேமிப்பு குறித்து முதல்வருக்கு ஆலோசனை கூறிய சித்து, அவரே கிட்டத்தட்ட 9 லட்சம் ரூபாய் மின்கட்டணம் செலுத்தாமல் இருக்கிறார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து வெளியேறிய நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் வெற்றிப்பெற்றார். மேலும் அமைச்சர் பதவி வகித்து வந்த அவர் சொந்த கட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதனால் மாநில முதல்வருக்கும் இவருக்கும் இடையே மோதல்போக்கு உருவாகியது. இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த சித்து, தொடர்ந்து காங்கிரஸை விமர்சித்து வருகிறார்.

தற்போது மாநிலத்தில் காணப்படும் மின்நெருக்கடி குறித்து ஆலோசனை கூறிய சித்து, கடந்த ஆண்டு 17 லட்சம் ரூபாய் மின்கட்டணத் தொகையை நிலுவையில் வைத்து இருந்தார் என்றும் இதனால் இந்த வருடம் மார்ச் மாதம் 10 லட்சம் செலுத்தினார் என்றும் மீதம் அவருடைய பெயரில் 8.67 லட்சம் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்தப் புகைப்படங்களைத் தொடர்ந்து சொந்தக் கட்சியை விமர்சித்த சித்து, ஊருக்கெல்லாம் உபதேசம் செய்து கடைசியில் அவரே இப்படி நடந்து கொள்கிறார் என் நெட்டிசன்கள் கடும் கேலி செய்து வருகின்றனர்.

More News

அட்வைஸ் செய்த பாஜக ஆச்சாரி....! தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் பி.டி.ஆர்....!

டுவிட்டரில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். அவர்களின் பதிவிற்கு, அட்வைஸ் செய்த பாஜக ஆச்சாரிக்கு, தக்க பதிலடி கொடுத்துள்ளார் பழனிவேல் தியாகராஜன்.

பாடகி சின்மயி கர்ப்பமா? திருமண புகைப்படத்தை வெளியிட்டு அளித்த விளக்கம்

பிரபல பாடகி சின்மயி கர்ப்பமாக இருப்பதாக ஒரு சில யூடியூப் சேனல்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த செய்திக்கு விளக்கமளித்து சின்மயி தனது சமூக நல பக்கத்தில் கூறியுள்ளார் 

தமிழ் நடிகருடன் யார்க்கர் கிங் நடராஜன்: வைரல் புகைப்படங்கள்!

நடிகர் யோகிபாபு உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தமிழகத்தின் யார்க்கர் கிங் நடராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. 

வரதட்சணை பேய்… மனைவியை கொலைசெய்து விட்டு 2 வருஷமா நாடகமாடிய இராணுவவீரர்!

தேனி மாவட்டத்தில் உள்ள பார்ஸ்ட்ரோடு பகுதியில் வசித்து வந்தவர் ஈஸ்வரன் (26). வரதட்சணை

நள்ளிரவில் அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடிய த்ரிஷா: வைரல் வீடியோ

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் மிகச் சில நடிகைகளில் ஒருவர் த்ரிஷா என்பதும் இப்போதும் அவர் இளம் நடிகைகளுக்கு இணையாக ஒரே நேரத்தில்