நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா? ஒரு விளக்கம்

கோலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாகவும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. மேலும் அந்த தயாரிப்பாளரை சமீபத்தில் சந்தித்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் சிலர் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாகவும் இதனை அடுத்து அவர்கள் இருவரும் எழும்பூரில் உள்ள தங்களது இல்லத்தில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ள நயன்தாரா தரப்பினர் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நயன்தாரா நடித்து முடித்துள்ள ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்தியா சீனா மோதல் எதிரொலி: டிக்டாக்கில் இருந்து விலகிய பிக்பாஸ் தமிழ் நடிகை! 

இந்திய எல்லையான கால்வான் பள்ளத்தாக்கில் திடீரென சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்ததால் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

தீ எரிந்தாலும் எனக்கு கவலையில்லை: டுவிட்டரில் இருந்து திடீரென விலகிய ரஜினி நாயகி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது

மெகா பட்ஜெட் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளருக்கு கொரோனா

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்

திருமண தேதியை 27 என தேர்வு செய்தது ஏன்? கண்ணீருடன் பதிலளித்த வனிதா

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா வரும் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

உலக வரைபடத்தை இலைகளில் வரைந்து தத்துவ மழை பொழிந்த சமந்தா: 

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய சமந்தா, இந்த லாக்டவுன் விடுமுறையை வீட்டிலேயே விவசாயம் செய்து பயனுள்ளதாக கழித்து வருகிறார்.