close
Choose your channels

உலக வரைபடத்தை இலைகளில் வரைந்து தத்துவ மழை பொழிந்த சமந்தா: 

Sunday, June 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய சமந்தா, இந்த லாக்டவுன் விடுமுறையை வீட்டிலேயே விவசாயம் செய்து பயனுள்ளதாக கழித்து வருகிறார். வீட்டிலேயே விவசாயம் செய்யும் சமந்தாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது வீட்டில் வளர்ந்த செடியின் பூக்கள் மற்றும் இலைகளாலேயே உலக வரைபடத்தை வரைந்துள்ள சமந்தா, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு வாழ்த்துக்களும், லைக்ஸ்களும் குவிந்துள்ள நிலையில் இந்த பதிவில் ஒரு தத்துவத்தையும் சமந்தா பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

பச்சை என்பது நம்பிக்கை, குணப்படுத்துதல் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றினை குறிக்கும் ஒரு நிறம். நாம் நம் வாழ்க்கையில் இந்த நேரத்தை திரும்பிப் பார்ப்போம், நாம் ஒருபோதும் ஒருவருக்கொருவர் கைவிடாத வகையில் நடந்து கொண்டு பெருமைப்படுவோம்’ என்று கூறியுள்ளார். மேலும் இலைகளால் உலக வரைபடத்தை செய்ய உதவி செய்தவர்களுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார். சமந்தாவின் இந்த சமூக வலைத்தல பதிவு வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.