close
Choose your channels

துபாயில் நயன்தாரா சந்தித்த தமிழ் நடிகை யார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்!

Wednesday, January 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில நாட்களாக துபாயில் தனது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் சமீபத்தில் புத்தாண்டு தினத்தில் கூட துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடத்தின் முன்பாக இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா துபாயில் தமிழ் நடிகை ஒருவரை சந்தித்ததன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ’நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் ’நோட்டா’ ’பட்டாஸ்’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்த நடிகை நகரின் மெஹ்ரின் பிரஸ்தா என்பவரைத்தான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சந்தித்துள்ளனர்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன், மெஹ்ரின் ஆகியோர் துபாயில் இணைந்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.