close
Choose your channels

சென்னை பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பூஜை: எதற்காக தெரியுமா?

Thursday, March 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை சென்ட்ரல் அருகே உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் திடீரென நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பூஜை நடத்திய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார் என்பதும் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென சமீபத்தில் சென்னை சென்ட்ரல் அருகே உள்ள பாடி முனீஸ்வரர் கோயிலில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பூஜையில் கலந்து கொண்டனர். நயன்தாரா புதிதாக இன்னோவா கார் வாங்கி உள்ள நிலையில் அந்த காருக்கு தான் பூஜை போட்டு உள்ளதாக புகைப்படங்களின் மூலம் தெரிய வருகிறது. இந்த புகைப்படங்களை நயன்தாரா ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘காத்துவாக்க்குல ரெண்டு காதல். என்ற திரைப்படம் ஏப்ரல் 28ல் ரிலீசாக இருக்கும் நிலையில் தற்போது ஷாருக்கானின் ’லயன்’ உள்பட 5 படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.