close
Choose your channels

பெண் குரலில் மிரட்டி பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் கைது!

Tuesday, February 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நூற்றுக்கணக்கான ஆண்களிடம் பெண் குரலில் பேசி லட்சக்கணக்கான பணத்தை மிரட்டி பறித்த நெல்லை வாலிபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த உதயராஜ் என்பவருக்கு சமீபத்தில் ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒரு பெண் ஆபாசமாக பேசியதோடு தனக்கு பணம் தரவேண்டும் என்று மிரட்டியதாக தெரிகிறது. ஆனால் உதயராஜ் அந்த மிரட்டலுக்கு பணியாமல் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் நெல்லையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தான் இந்த செயலை செய்தவர் என்றும், பெண் குரலில் பேசிய ஆண் அவர்தான் என்பதையும் கண்டுபிடித்தனர்.

ராஜ்குமாரை கைது செய்து போலீசார் அவரிடம் விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 5 வருடங்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களிடம் பெண் குரலில் பேசி மிரட்டி பணம் பறித்து உள்ளதாகவும், அந்த பணத்தில் சொந்த வீடு, கார் என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

தொலைபேசியில் மிரட்டல் விடுப்பது மட்டுமின்றி ஆபாச படங்களை பகிர்தல் ஆகியவற்றின் மூலமும் அவர் பணம் சம்பாதித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த தொழிலை அவர் சென்னையில் உள்ள இரண்டு பெண்கள் மூலம் கற்றுக் கொண்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜ்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை செய்து அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.