போனிகபூருக்கு மாலை மரியாதை செய்த மூன்று பேர்!

  • IndiaGlitz, [Friday,August 02 2019]

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் சிறப்பு காட்சி இன்று திரையிடப்பட்டது என்பதையும் அந்த சிறப்பு காட்சியில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த சிறப்பு காட்சியை பார்க்க சென்னை வந்திருந்த போனிகபூருக்கு இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற ஜி ஸ்ரீனிவாசன், கே ராஜமன்னார் மற்றும் எம் ராகுல் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தை பெரிய நிறுவனங்கள் ரிலீஸ் செய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென ஒரு திருப்பமாக இவர்கள் மூவரும் இந்த படத்தை ரிலீஸ் செய்கின்றனர். இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் இந்த மூவருக்கும் மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் இன்றைய சிறப்பு காட்சியை பார்த்த பிரபலங்கள் அனைவரும் அஜித்தின் நடிப்பை மிகப்பெரிய அளவில் புகழ்ந்து வருவதால் அஜித் ரசிகர்களுக்கு சரியான தீனி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

'நேர் கொண்ட பார்வை' ஸ்பெஷல் காட்சி: தாறுமாறான படம் என விமர்சனம்

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 

ஸ்ருதிஹாசனின் 'பறையடி' இசைக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்!

உலகநாயகன் கமல்ஹாசன் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் இசைத் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்பதும் அவர் ஒரு நல்ல பாடகி என்பதும் தெரிந்ததே.

விஜய்யின் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நடித்துள்ளாரா?

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'வாடா' 'போடா' 'லூசு' 'போப்பா': எல்லை மீறும் சரவணன், பொறுமை இழக்கும் சேரன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் சேரனை சரவணன் அநாகரீகமாக பேசியது அனைவரையும் அதிர வைத்த நிலையில் சற்றுமுன் வெளியாகிய

உதயநிதியின் அடுத்த பட ஃபர்ஸ்லுக் போஸ்டர்!

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கண்ணே கலைமானே' என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் சைக்கோ, ஏஞ்சல், கண்ணை நம்பாதே ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார்