close
Choose your channels

போனிகபூருக்கு மாலை மரியாதை செய்த மூன்று பேர்!

Friday, August 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் சிறப்பு காட்சி இன்று திரையிடப்பட்டது என்பதையும் அந்த சிறப்பு காட்சியில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த சிறப்பு காட்சியை பார்க்க சென்னை வந்திருந்த போனிகபூருக்கு இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற ஜி ஸ்ரீனிவாசன், கே ராஜமன்னார் மற்றும் எம் ராகுல் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தை பெரிய நிறுவனங்கள் ரிலீஸ் செய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென ஒரு திருப்பமாக இவர்கள் மூவரும் இந்த படத்தை ரிலீஸ் செய்கின்றனர். இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் இந்த மூவருக்கும் மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் இன்றைய சிறப்பு காட்சியை பார்த்த பிரபலங்கள் அனைவரும் அஜித்தின் நடிப்பை மிகப்பெரிய அளவில் புகழ்ந்து வருவதால் அஜித் ரசிகர்களுக்கு சரியான தீனி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.