சற்றுமுன் வந்த செய்தி: இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு

சற்றுமுன் வந்த செய்தி: இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு.

இலங்கையில் இன்று காலை மூன்று சர்ச்சுகள் மற்றும் நான்கு ஓட்டல்கள் என தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 160 பேர் பலியாகியுள்ள நிலையில் சற்றுமுன் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அந்நாடே பதட்டத்தில் உள்ளது.

இலங்கையில் உள்ள தெஹிவளை என்ற இடத்தில் மிருகக்காட்சி சாலை அருகில் உள்ள ஹோட்டலில் அடுத்த குண்டு வெடித்ததாகவும், இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து இந்த மிருகக்காட்சி சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இதனை சேர்த்து இலங்கையி மொத்தம் எட்டு இடங்களில் வெடிகுண்டு வெடித்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.

இந்த குண்டுவெடிப்புகளை தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து நாடுமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
 

More News

இலங்கையில் பயங்கர குண்டுவெடிப்பு: விரிவான தகவல்

விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற இறுதி போருக்கு பின்னர் இன்று இலங்கையில் பயங்கர வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஏற்கனவே ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கும் நிலையில் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

சிம்பு-கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம்: அட்டகாசமான அறிவிப்பு

நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள 'மாநாடு' திரைப்படத்தில் நடிக்கவுள்ள நிலையில் அவர் நடிக்கும் புதிய படம் ஒன்றின் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தேவாலயத்தில் குண்டுவெடிப்பு: நூலிழையில் உயிர் தப்பிய நடிகை ராதிகா

இலங்கையில் இன்று ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் அந்நாட்டில் உள்ள இரண்டு தேவாலயங்கள்

விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி, அர்ஜூன் இணைந்து நடித்த 'கொலைகாரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து இந்த படம் இம்மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்