close
Choose your channels

சற்றுமுன் வந்த செய்தி: இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு

Sunday, April 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சற்றுமுன் வந்த செய்தி: இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு.

இலங்கையில் இன்று காலை மூன்று சர்ச்சுகள் மற்றும் நான்கு ஓட்டல்கள் என தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 160 பேர் பலியாகியுள்ள நிலையில் சற்றுமுன் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அந்நாடே பதட்டத்தில் உள்ளது.

இலங்கையில் உள்ள தெஹிவளை என்ற இடத்தில் மிருகக்காட்சி சாலை அருகில் உள்ள ஹோட்டலில் அடுத்த குண்டு வெடித்ததாகவும், இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து இந்த மிருகக்காட்சி சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இதனை சேர்த்து இலங்கையி மொத்தம் எட்டு இடங்களில் வெடிகுண்டு வெடித்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.

இந்த குண்டுவெடிப்புகளை தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து நாடுமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.