close
Choose your channels

வாக்குச் சேகரிப்பில் பெண்ணுக்கு பூச்சூடி மகிழ்வித்த நிதியமைச்சர்!

Saturday, March 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் நேற்று ஒருநாள் பயணமாக புதுச்சேரி வந்து இருந்தார். மேலும் புதுச்சேரி மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை நேற்று காலை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கையோடு பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பிலும் ஈடுபட்டார்.

நெல்லித்தோப்பு மற்றும் காமராஜ் நகர் பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நிர்மலா சீதாராமனை அங்குள்ள பெண்கள் ஆரத்தி எடுத்து மேளதாளத்துடன் வரவேற்றனர். இதனால் குளிர்ந்து போன நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் தனக்கு ஆரத்தி எடுக்கும் பெண்களிடம் அக்கறையோடு பேசவும் செய்தார்.

இதையடுத்து நிர்மலா சீதாரமனுக்கு ஆரத்தி எடுத்த பெண் ஒருவர் பூச்சரத்தினை கொடுத்தார். அந்தப் பூவை அன்போடு வாங்கிக்கொண்ட அவர் அடுத்த வீட்டிற்கு சென்றவுடன் தனக்கு ஆரத்தி எடுத்த மற்றொரு பெண்ணிற்கு சூடியச் சம்பவம் அங்குள்ளவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புதுச்சேரியில் என்ஆர்காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் பாஜகவிற்கு 9 தொகுதிகளும் அதிமுகவிற்கு 5 தொகுதிகளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது தேர்தல் அறிக்கை வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.