சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பாதித்து வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
’எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சில மெல்லிய அறிகுறிகளும் இருப்பதை அடுத்து நான் என்னை வீட்டிலேயே தனிமை படுத்துக்கொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்கிறேன். என்னை தவிர எனது வீட்டில் உள்ள மற்ற அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது
எனக்கு மருத்துவ சிகிச்சை தந்துகொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
— Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments