close
Choose your channels

பொள்ளாட்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசுக்கு ஜாமீனா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Tuesday, March 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தையே உலுக்கி வரும் பொள்ளாட்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரீசன் உள்பட 4 பேர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அப்போதுதான் இதுபோன்ற தவறை வெறொருவர் செய்ய அஞ்சுவார்கள் என்றும் திரையுலகினர் உள்பட சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் பொள்ளாட்சி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று பொள்ளாச்சி நீதிமன்றத்தில் நடந்தது. திருநாவுக்கரசுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முக்கிய நபரான திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் வழங்க பொள்ளாச்சி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.