அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை, எதையும் சந்திக்க தயார்: முதல்வர் பழனிசாமி

  • IndiaGlitz, [Thursday,February 11 2021]

அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கின்றேன் என்றும், அச்சுறுத்தல் என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். செய்தியாளர்களின் கேள்விகளும் முதல்வரின் பதில்களும் பின்வருமாறு:

கேள்வி: சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டு வருகிதே?

பதில்: நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசாங்கத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கேள்வி: இடஒதுக்கீடு கொடுக்க வாய்ப்பு உண்டா?

பதில்: எந்த சூழ்நிலையில் எதை செய்ய வேண்டுமோ அந்த அந்த சூழ்நிலையில் அரசாங்கம் செயல்படும்.

நான் சென்ற இடம் எல்லாம் சிறப்பாக எழுச்சியாக மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சி அளிக்கிறது. அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும். உறுதியாக அம்மாவின் ஆட்சி தொடரும்.

அ.ம.மு.க கட்சி என்று சொல்ல முடியுமா? அ.தி.மு.க வேறு அ.ம.மு.க வேறு. அ.ம.மு.க மூக்கை நுழைத்து பார்க்கிறது, நிச்சயம் ஒன்றும் நடக்காது. அ.ம.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு.கவில் சேர விருப்பபட்டால் தலைமை முடிவு செய்யும்.

கேள்வி: தி.மு.க பொது எதிரி, சேர்ந்துதான் முறியடிக்க வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளாரே?

பதில்: இது அவர்களுடைய கருத்து, இதுக்கு நாங்கள் எப்படி கருத்து சொல்ல முடியும். அ.தி.மு.கவை பொறுத்த வரை எம்.ஜி.ஆர் அவர்கள் தி.மு.க ஒரு தீய சக்தி என்று கூறினார், அவர்களை எதிரி கட்சியாக பார்க்கிறோம். அவர்களை எதிர்த்தே போட்டியிட்டு தொடர்ந்து போராடி வெற்றி பெற்று வருகிறோம்.

கேள்வி: சசிகலா குறித்து பேசுவதில்லை என்று கூறுகிறார்களே?

பதில்: கட்சியில் இல்லாதவர்கள் குறித்து ஏன் பேச வேண்டும். டி.டி.வி தினகரன் எங்கள் கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களை பிரித்து கொண்டு சென்று ஆட்சியை கவிழ்க்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் பிரிக்க வேண்டும் என்று செயல்பட்டார். ஆனால் கட்சியை உடைக்க முடியவில்லை அ.ம.மு.க என்று ஒரு கட்சியை தொடங்கினார். அதனால் அவரை பற்றி பேசுகிறோம்.

உச்ச நீதி மன்றம் ஊழல் குற்றசாட்டு உள்ளவர்களை விசாரிக்க தனி நீதி மன்றம் அமைத்துள்ளது. இது தெரியாமல் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் 23 பேர் மீது ஊழல் புகார் மீது வழக்கு நடைபெற்று வருகிறது

கேள்வி: துரைமுருகன் சொல்கிறார் முதல்வர் மட்டுமே வெளியே வருகிறார் துணை முதல்வர் வெளியில் வருவதில்லை என்று?

பதில்: அவருடைய கட்சியை பற்றி கவலைபட வேண்டும். அழகிரி பற்றி அவர் பேசட்டும். திட்டமிட்டு விஷமத்தனமான பிரச்சாரத்தை தி.மு.கவினர் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு எள் மணி அளவு கூட எங்கள் கட்சியில் பிளவை ஏற்படுத்த முடியாது.

13 ஆண்டு காலம் தி.மு.க மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள், என்ன திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தார்கள்.

அ.தி.மு.க ஆட்சியில் ஒரே வருடத்தில் 11 மருத்து கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் உதவி பெற்று தர்மிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

கேள்வி: வேலூரில் துப்பாக்கியுடன் நபர் பிடிபட்டுள்ளார். தற்போது சென்னை மற்றும் சேலத்திற்கு மிரட்டல் வந்துள்ளது? யாருடைய அச்சுறுதல் உள்ளதா என்று நினைக்கிறீகளா?

பதில்: அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கின்றேன். இந்த கேள்விக்கே இடமில்லை.

More News

விஷ்ணுவிஷாலின் அடுத்த படத்தில் இணைந்த முன்னணி நடிகை!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும் காடன், எப்.ஐ.ஆர், ஜெகஜ்ஜால கில்லாடி மற்றும் மோகன்தாஸ் ஆகிய நான்கு திரைப்படங்கள் தயாராகி வருகிறது என்பதும் இவற்றில் காடன் திரைப்படத்தின்

போனிகபூரின் மாஸ் 'வலிமை' அப்டேட்: ஸ்தம்பிக்கும் சமூக ஊடகங்கள்!

அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக 'வலிமை' படத்தின் எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகும் நட்சத்திர தம்பதியின் மகள்!

தமிழ் தெலுங்கு திரை உலகின் நட்சத்திர தம்பதிகளின் மகள் தமிழ் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 

பிப்ரவரி 14, நமக்கு மட்டும் இப்படியா? பிக்பாஸ் பாலாஜி புலம்பல்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரியும், இரண்டாவது இடத்தை பாலாஜியும் பிடித்தனர்

அதை நினைத்தால் எனக்கு தூக்கமே வராது: காஜல் அகர்வாலின் திகில் அனுபவம்

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'லைவ் டெலிகாஸ்ட்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த காஜல் அகர்வால் இந்த படத்தில் நடித்த அனுபவம்