close
Choose your channels

அதை நினைத்தால் எனக்கு தூக்கமே வராது: காஜல் அகர்வாலின் திகில் அனுபவம்

Thursday, February 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ’லைவ் டெலிகாஸ்ட்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த காஜல் அகர்வால் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறிய போது ’இந்த படத்தில் நடித்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நினைத்துப்பார்த்தால் இப்பொழுது கூட தூக்கம் வரவில்லை’ என்று கூறியுள்ளார்

ஹாட்ஸ்டாரில் வரும் 12ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் திரைப்படம் ’லைவ் டெலிகாஸ்ட்’. காஜல்அகர்வால் முக்கிய வேடத்திலும் கயல் ஆனந்தி, வைபவ் ரெட்டி, பிரியங்கா செல்வா, டேனியல் போப், சுப்பு பஞ்சு அருணாசலம் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

மாந்த்ரீக சக்திகள் நிறைந்த ஒரு வீட்டில் தொலைக்காட்சி தொடர் ஒன்றை படமாக்குவதற்காக காஜல் அகர்வால் குழுவினர் செல்கின்றனர். அப்பொழுது அவர்களுக்கு ஏற்பட்ட திகில் அனுபவங்கள்தான் லைவ் டெலிகாஸ்ட் படத்தின் கதை. இந்த படம் குறித்து காஜல் அகர்வால் கூறியபோது ’இயக்குனர் வெங்கட் பிரபுவின் நண்பர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முழுவதும் நடந்தது. மலை உச்சியில் இருக்கும் அந்த வீடு தனிமையாக இருந்த காரணமாக அந்த வீட்டை பார்க்கும் போதே அச்சமாக இருந்தது. இந்த வீட்டில் படப்பிடிப்பை நடத்திய பின்னர் வீட்டிற்கு வந்த பின்னாலும் எனக்கு அந்த வீடு குறித்த ஞாபகமே இருந்தது. அந்த வீட்டிலேயே இன்னும் இருப்பதாக எனக்கு ஒரு பிரமை என்னை அச்சுறுத்தி கொண்டே இருந்தது இப்பொழுது அந்த வீட்டை நினைத்தால்கூட என் குலை நடுங்குகிறது. படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் அதே போன்ற உணர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.