புதிய படங்கள் வெளியீடு இல்லை என்ற முடிவு ஏன்? விஷால் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,October 04 2017]

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் புதிய கேளிக்கை வரியான 10% வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 6ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. எனவே வரும் 6ஆம் தேதி வெளியாகவிருந்த சுமார் 9 சிறிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என தெரிகிறது

இந்த நிலையில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்ற முடிவு ஏன்? என்பது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சற்றுமுன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி வரும் 6ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை என்ற முடிவு அனைவரும் ஒன்றுகூடி ஆலோசித்தே எடுக்கப்பட்டது. கேளிக்கை வரியுடன் புதிய படங்கள் வெளியானால் தயாரிப்பாளர்களுக்குத்தான் நஷ்டம் ஏற்படும். தற்போதைய சூழலில் 40% வரியை அரசுக்கு செலுத்தக் கூடிய நிலையில் தமிழ் சினிமா இல்லை எனவே புதிய திரைப்படங்களை வெளியிட்டு இழப்பை சந்திக்க தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. கேளிக்கை வரியை தமிழக அரசு நிச்சயமாக ரத்து செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று கூறியுள்ளார்.

புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாது என்பதால் ஏற்கனவே ரிலீஸ் ஆன திரைப்படங்கள் வழக்கம்போல் திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனை முடியும் வரை ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்களை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More News

தாஜ்மஹாலை பின்னுக்கு தள்ளிய மீனாட்சி அம்மன் கோவில்: தமிழனின் கெத்து

தாஜ்மஹால் மற்றும் உலகின் பணக்கார கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி இந்தியாவிலேயே தூய்மையான கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

'மெர்சல்' டைட்டில் வழக்கு. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

கமல்ஹாசனின் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் தேதி இதுதான்

உலகநாயகன் கமல்ஹாசன் வெகுவிரைவில் தனது அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்

ஜூங்கா: விஜய்சேதுபதியின் வித்தியாசமான லுக்

இந்த ஆண்டு தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் விஜய்சேதுபதி தற்போது 'ஜூங்கா' என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய்சேதுபதியே தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார்.

ஒரே வாரத்தில் இரண்டு புயல்கள்: தாங்குமா சென்னை?

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குடிதண்ணீர் பிரச்சனை ஒருவழியாக தீர்ந்தது.