close
Choose your channels

தொடர் மழை எதிரொலி: சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

Saturday, October 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மழையும், விட்டு விட்டு மழையும் பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவும் இன்று அதிகாலையும் நல்ல மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் இன்று விடுமுறை இல்லை என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் திருவாரூரில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், நீலகிரி மாவட்டட்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனியில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும், மதுரை மாவட்டத்தில் மழை காரணமாக ஒரு சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை இன்றே வாங்கி வைத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.