close
Choose your channels

ஆபாச பட விவகாரம்: பிரபல நடிகை மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

Tuesday, May 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆபாச பட விவகாரத்தில் பிரபல நடிகை மற்றும் அவரது கணவர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கடந்த 2020 ஆம் ஆண்டு கோவா மாநில கடற்கரையில் ஆபாச படத்தில் நடித்ததாகவும் இதனை அவருடைய கணவர் வீடியோ எடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப் பட்டது.

இதனையடுத்து பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் சாம் பாம்பே ஆகீயோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த போலீசார் 35 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்திய தண்டனை சட்டம் 292, 293, 294 மற்றும் 447 கீழ் நடிகை பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் சாம் பாம்பே ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.