close
Choose your channels

தமிழகத்தில் மேலும் ஒருவரை தாக்கிய கொரோனா: அதிர்ச்சி தகவல்

Thursday, March 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் சுமார் 150 பேருக்கு மேல் பரவி உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் மூன்றாவதாக ஒருவரையும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ள தகவலை சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அயர்லாந்து நாட்டில் உள்ள டப்ளின் என்ற நகரிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த 21 வயது மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருடைய ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த மாணவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவருடைய உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் டெல்லியில் இருந்து ரயிலில் சென்னை வந்த ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது தெரிந்ததே
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.