பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தினமும் ஒரு வைல்ட் கார்ட்: இன்று வந்தவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அதன் பின்னர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக சதீஷ், ரம்யா பாண்டியன் ஆகியோர் வந்ததை பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று வைல்ட்கார்ட் எண்ட்ரியாக தீனா வந்த நிலையில் இன்று மீண்டும் வைல்ட்கார்ட் போட்டியாளராக நடன இயக்குனர் சாண்டி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் வனிதா ஆகிய இருவரும் எவிக்ட் செய்யப்படாமல் எதிர்பாராதவிதமாக வாக்-அவுட் செய்யப்பட்டதை அடுத்து கூடுதலாக வைல்ட் கார்டு போட்டியாளர் வந்துள்ளதாக கூறப்படுகிறது .

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் சண்டையும் சச்சரவுமாக இருந்து வரும் நிலையில் தீனா மற்றும் சாண்டியின் வரவு பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சாண்டி, அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

20 வருடங்களுக்கு பின் லிங்குசாமி படத்தின் இரண்டாம் பாகம்: இதிலும் ஷட்டர் காட்சி இருக்குமா?

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 20 வருடங்களுக்குப்பின் உருவாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 

'தளபதி 66' படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் வம்சியின் ராசியான நாயகி?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான சூப்பர்ஹிட் திரைப்படத்தில் நடித்த நடிகை தான் தளபதி விஜய்யின் 66வது படத்திலும் நாயகியாக போகிறார் என்ற தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ஜிவி பிரகாஷ் அடுத்த படத்தின் சென்சார் தகவல்!

ஜிவி பிரகாஷ் நடித்துள்ள அடுத்த படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் வெளியாகி உள்ளது

ஜாலியோ ஜிம்கானா: ஜாலியான புகைப்படத்தை பகிர்ந்த பூஜா ஹெக்டே!

விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது என்பதும் இரண்டு பாடல்களும் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

கொல்கத்தாவை விரட்டியடிக்க தல தோனியின் சிஷ்யன் தயார்

முதல் டாஸ் போடப்படுவதற்கு முன்பே பரபரப்பு பற்றிக்கொண்டுவிட்டது. தல தோனி கேப்டனாக நீடிப்பாரா என்ற சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது.