'எஸ்கே 23' படத்தின் முதல் நாளே பிரச்சனை? அவுட்டோர் யூனிட் அறிவித்த அதிர்ச்சி அறிவிப்பு
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ’எஸ்கே 23’ படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் இந்த படத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என அவுட்டோர் யூனிட் திடீரென அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்கும் ’எஸ்கே 23’படத்தின் படப்பிடிப்பை நேற்று தொடங்கிய நிலையில் இந்த படப்பிடிப்புக்கு வெளிமாநில அவுட்டோர் யூனிட்டுகளை பயன்படுத்தியதால் இன்று முதல் எந்த திரைப்படத்திற்கும் சீரியல்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என தென்னிந்திய அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய அவுட்டோர் யூனிட் சங்கம் கூறியபோது, ‘ஏற்கனவே நடந்த பேச்சு வார்த்தையை மீறி சிலர் செயல்படுவதால் இன்று முதல் எந்த திரைப்படத்திற்கும் சீரியல்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு அவுட்டோர் யூனிட் சங்கம் கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கமல்ஹாசனின் ’தக்ஃலைப்’ படப்பிடிப்பிலும் அவுட்டோர் யூனிட் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் மூன்று நாட்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறோம் என்று பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக அந்த பிரச்சனை முடிந்த நிலையில் தற்போது ’எஸ்கே 23’ படத்திலும் வெளிமாநில அவுட்டோர் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு தென்னிந்திய அவுட்டோர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)