close
Choose your channels

'சீக்கிரமே அவருடன் இணைவேன்..' பிரபல இசையமைப்பாளர் குறித்து  பா ரஞ்சித்

Thursday, December 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் மார்கழியில் மக்கள் இசை என்ற விழாவை நடத்தி வரும் நிலையில் அந்த விழாவில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்துகொண்டார். யுவன் சங்கர் ராஜாவை மேடையில் வைத்துக்கொண்டே இயக்குனர் பா ரஞ்சித் அவருடன் நான் விரைவில் இணைவேன் என்று தெரிவித்தார். இதனை அடுத்து ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி இருவரையும் உற்சாகப்படுத்தினார்.

மார்கழியில் மக்களிசை என்ற விழாவில் பா ரஞ்சித் மேலும் பேசும்போது, ‘யுவன் சங்கர் ராஜாவின் இசைதான் என்னுடைய வலியை மறக்க உதவி செய்தது. என்னுடைய பயணத்தில் யுவனின் இசைக்கு நிறைய பங்கு இருக்கிறது என்றும் பேசினார். மேலும் யுவன் சங்கர் ராஜாவுடன் விரைவில் இணைவேன், அது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்தார். அதற்கு அருகில் இருந்த யுவன் சங்கர் ராஜா, ‘ ஐ அம் ரெடி’ என்று கூறியதை அடுத்து ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.

இதனை அடுத்து ’தங்கலான்’ திரைப்படம் குறித்து கூறிய பா ரஞ்சித் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜனவரியில் நடைபெறும். படம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

#Watch | "யுவன் கூட சீக்கிரமே இணையப்போறேன்” - இயக்குநர் பா.ரஞ்சித்#SunNews | #YuvanShankarRaja | #MargazhiyilMakkalisai | #PaRanjith | @beemji | @thisisysr pic.twitter.com/ReHMBjkMf9

— Sun News (@sunnewstamil) December 29, 2022

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.