close
Choose your channels

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் விரட்டியடிப்பு!

Wednesday, February 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை நேற்று பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை அழித்த நிலையில் இன்று பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானங்கள், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாகவும் அந்த விமானங்களை இந்திய விமானப்படை விரட்டி அடித்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஏ.காஃபூர் இதுகுறித்து கூறியபோது, இன்று அதிகாலை 2 மணிக்கு இந்திய எல்லைக்குள் புகுந்து' 2 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், ஒரு இந்தியா விமானி கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியின்படி இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் ரஜோரி என்ற பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகளுக்கு அருகே குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாகவும் அந்த விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.