close
Choose your channels

ஒரே நேரத்தில் வெளியாகும் பார்த்திபன் - லிங்குசாமி படங்கள்: இதற்கு முன் மோதியுள்ளதா?

Wednesday, July 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லிங்குசாமி இயக்கிய 'தி வாரியர்’ என்ற திரைப்படம் ஜூலை 14ஆம் தேதியும் பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல்’ திரைப்படம் ஜூலை 15-ஆம் தேதியும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே பார்த்திபன் மற்றும் லிங்குசாமி இயக்கிய படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த ’அஞ்சான்’ திரைப்படம் வெளியானது. அதே நாளில்தான் பார்த்திபனின் ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற படம் வெளியானது என்பதும் சந்தோஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் பார்த்திபன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

’அஞ்சான்’ மற்றும் ’கதை திரைக்கதை வசனம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியபோதிலும் ’அஞ்சான்’ திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் கிடைத்தன.

இந்த நிலையில் 8 ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் பார்த்திபன் மற்றும் லிங்குசாமி திரைப்படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ள நிலையில் இரண்டு படங்களுக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த இரண்டு படங்களும் நிச்சயம் வெற்றி பெறும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment