சர்தார் பட்டேல் சிலை: ரூ.3000 கோடி வீணா?

  • IndiaGlitz, [Wednesday,October 31 2018]

உலகின் மிக உயர்ந்த சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை குஜராத்தில் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். இந்த சிலையை வடிவமைக்க சுமார் ரூ.3000 கோடி செலவானதாக கூறப்படுகிறது. இந்த சிலையின் சிலை உயரம், 182 மீட்டர்கள். அதன் அடித்தளம் 58 மீட்டரையும் சேர்த்தால் இதன் மொத்த உயரம் 208 மீட்டர் ஆகும். 6.5 ரிக்டர் அளவுகோல் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டாலும் சேதமடையாத வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை குறித்து சமூக வலைத்தளத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்னும் பல கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான சாலைகள் மற்றும் மின்சாரம் கூட இல்லாத நிலையில் ரூ.3000 கோடி செலவு செய்து பட்டேலுக்கு இந்த சிலை தேவைதானா? பட்டேல் இன மக்களின் வாக்குகளை பெறவே இவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டிருப்பதாக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தியாவின் இரும்பு மனிதர் மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியவர் என்ற பெருமை பெற்ற சர்தார் பட்டேல் அவர்களே இன்று உயிருடன் இருந்திருந்தால் இதனை விரும்பியிருக்க மாட்டார் என்ற ரீதியில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் ஒருசிலர் இதற்கு மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த சிலையை வடிவமைக்க சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த மூன்று வருடங்களில் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும் உலகிலேயே உயர்ந்த சிலை இந்தியாவில் தான் உள்ளது என்ற பெருமை தற்போது கிடைத்துள்ளது இதனால் இந்த சிலையை காண உலகின் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலாபயணிகள் குவிய வாய்ப்பு உள்ளது. இதனால் இந்திய சுற்றுலாத்துறைக்கு எதிர்காலத்தில் வருமானம் அதிகரிக்கும் என்ற கருத்துக்களும் பதிவாகி வருகிறது.

இந்த சிலை குறித்து உங்கள் கருத்து என்ன என்பது குறித்து கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.

More News

மாரி 2: முக்கிய பணியை முடித்த வில்லன் டொவினோ தாமஸ்

தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

பட்டாசு குறித்த வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

மீண்டும் ஆரவ்வுடன் ஓவியா: வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஓவியாவுக்கும் ஆரவ்வுக்கும் காதல் ஏற்பட்டதை அடுத்து ஆரவ், ஓவியாவின் காதலை நிராகரித்ததால் மனநிலை மாற்றம் அடைந்த ஓவியா நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.

ஹவாய் தீவில் 'சர்கார்' படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வழக்கம்போல் பல்வேறு தடைகளை தாண்டி வரும் தீபாவளி தினம் முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

36 நாட்கள், சிங்கிள் ஷெட்யூல்: முடிந்தது சூர்யாவின் அடுத்த படம்

பிரபல நடிகர் சூர்யா திறமையான நடிகராக இருப்பது மட்டுமின்றி சினிமாவில் உள்ள திறமையான இளைஞர்களுக்கும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்து வருவது தெரிந்ததே