close
Choose your channels

மாரி 2: முக்கிய பணியை முடித்த வில்லன் டொவினோ தாமஸ்

Wednesday, October 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கிவிட்டது

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இன்று இந்த படத்தின் தனது பகுதிக்கான டப்பிங் பணியை முடித்துவிட்டார். இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வரும் நவம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று நேற்று தனுஷ் அறிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தமஸ், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.