close
Choose your channels

ஆசிரியர் ரூபத்தில் காமக்கொடூரன்....! புகாரளித்த மாணவிகள்....!

Saturday, July 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரியின் பேராசிரியர் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி பிஷ்ப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகவும், பேராசிரியராகவும் இருப்பவர் தான் பால் சந்திர மோகன். இவன் வகுப்பில் மாணவிகளிடம் நெருக்கமாக அமர்ந்து இரட்டை அர்த்தத்திலும், கொச்சையாக பேசுவதையுமே வழக்கமாக வைத்துள்ளான். வகுப்பில் குறைந்த அளவில் மாணவிகள் இருந்தால், தனது அறைக்கு மாணவிகளை தனியாக வரச்சொல்லி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான் . இதே துறையில் உதவி பேராசிரியராக வேலை பார்க்கும் நளினி என்பவர், மாணவிகளிடம், "எச்.ஓ.டியை பார்க்க செல்லும் போது, முகம் கழுவி மேக்கப் போட்டுக்கொண்டுதான் செல்ல வேண்டும்" என்று வற்புறுத்தியுள்ளார். மேலும் பல பெண்களிடம் அத்துமீறி பாலியல் சேட்டைகள் செய்துள்ளான். இதற்கு அடுத்தகட்டமாக "சட்டை மற்றும் பேண்ட்-ஐ தளர்த்தி, பல பாலியல் செய்கைகளை செய்துள்ளதால், வகுப்பறையில் நாங்கள் தலைகுனிந்தே இருப்போம்" என மாணவிகள் திருச்சி காவல் ஆணையரிடத்தில் அளித்த புகாரில் கூறியிருந்தனர். மேலும் இந்தக் காரணங்களால் தாங்கள் கல்லூரியிலிருந்து வெளியேற விரும்புவதாக, அந்தப்புகாரில் கூறப்பட்டிருந்தது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.