close
Choose your channels

தெரு விளக்கில் படித்த சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்: இணையத்தில் கலக்கும் வீடியோ!

Sunday, May 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இணையத்தில் வெளியான வைரல் வீடியோ ஒன்றால் தெருவிளக்கில் படித்த ஒரு சிறுவனுக்கு அதிர்ஷ்டம் அடித்து அந்த ஏழைச்சிறுவனின் வாழ்க்கையே ஒரே நாளில் மாறியுள்ளது.

பெரு நாட்டில் விக்டர் மார்ட்டின் என்ற சிறுவன், தன்னுடைய வீட்டில் மின்சார வசதி இல்லாத காரணத்தால் தெருவிளக்கில் வீட்டுப்பாடம் எழுதி படித்து வந்தான். இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்தார். இந்த வீடியோவை மில்லியன்கணக்கானோர் பார்த்து வைரலான நிலையில் இந்த வீடியோ பெரு நாட்டின் கோடீஸ்வரர் யாசுஃப் அஹ்மத் என்பவரும் பார்த்து, அந்த சிறுவனுக்கு உதவ முன்வந்தார்.

சிறுவனின் படிப்புக்கு தேவையான அனைத்து செலவுகளையும் தானே பொறுப்பேற்பதாக அறிவித்த யாசுஃப் அஹ்மத், அவருடைய தாயாருக்கும் வேலை கொடுத்தார். அதுமட்டுமின்றி சிறுவன் படித்த பள்ளிக்கு விளையாட்டு மைதானத்திற்கு தேவையான வசதிகள் உள்பட பல உதவிகளையும் செய்வதாக அறிவித்தார்.

மேலும் அந்த சிறுவனுடன் தெருவிளக்கில் யாசுஃப் அஹ்மத் அவர்களும் உட்கார்ந்து படிப்பது போன்றும், மைதானத்தில் சிறுவனுடன் யாசுஃப் அஹ்மத் கால்பந்து விளையாடும் வீடியோவும் தற்போது வலம் வரத்தொடங்கிவிட்டது. ஒரே ஒரு வீடியோ ஒரு சிறுவனின் வாழ்க்கையை தலைகிழாக மாற்றியது மட்டுமின்றி அவன் படித்த பள்ளிக்கும் எதிர்பாராத பல உதவிகள் கிடைத்துள்ளது. இணையம் என்பது இந்த தலைமுறையினர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதும் இதனை சரியாக பயன்படுத்தினால் எதிர்பாராத அதிசயங்கள் பல நடக்கும் என்பதும் இந்த சம்பவத்தின் மூலம் தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.